மிராய்” திரைப்பட விமர்சனம்
இன்று செப்டம்பர் 12, 2025 வெள்ளிக்கிழமை வெளியான பல சூப்பரான சாகசங்கள் நிறைந்த தெலுங்கு திரைப்படம் “மிராய்” பற்றி இங்கு ஒரு விறு விருப்பான விமர்சனம் இதோ!
இயக்குனர் கார்த்திக் காட்டம்னேணி கைவண்ணத்தில் இப்படம் அதி ரடியாக தயாரிக்கப்பட்டு வெளி இடப்பட்டுள்ளது. இந்த சூப்பர் ஹீரோ படத்தில் பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்து வெளிவந்துள்ளது. ஹீரோ தேஜா சஜ்ஜாவும் மற்றும் மஞ்சு மனோஜ் இப்படத்தில் கலக்கியுள்ளனர். ரித்திகா நாயக், ஷ்ரியா சரண், ஜெகபதி பாபு, ஜெயராம் ஆகியோரும் இப்படத்தில் நடித்துள்ளனர் என்பது குறிபிடத்தக்கது.
மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட இந்த திரைப்படம் தெலுங்கு மட்டுமின்றி மற்ற இந்திய மொழிகளிலும் டப் செய்யப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது.
கதை சுருக்கம்
படம் இந்திய வரலாற்றை ஒட்டி, அந்தகால நம்பிக்கைகள்கொண்ட புராண கற்பனையில் அமைக்கப்பட்டு எடுக்கப்பட்டுள்ளது. மிகவும் புகழ் பெற்ற கலிங்க போர் முடிந்து, போருக்கு காரணமான அசோகா சக்ரவரத்தியின் காலத்தில் கதை ஆரம்பிக்கிறது. மிகவும் துன்ப மன நிலையில் இருக்கும் அசோகர் ஒன்பது நூல்களை எழுத வைக்கிறார். இந்த நூல்கள் சாதாரண மானிடர்களை தெய்வ மனம் கொண்டவர்களாக மாற்றும் தன்மை கொண்டவையாக இருக்கிறது.
இந்த நூல்களை ஒரு பாதுகாப்பு குழுவின் பொறுப்பில் பத்திரமாக பாதுகாக்க ஏற்பாடு செய்கிறார் அசோகர். கேட்ட எண்ணங்கள் கொண்ட மகாபீர் லாமா தீய சக்திகளைப் பயன்படுத்தி அந்த தெய்வீக நூல்களை கைப்பற்ற முயல்கின்றார். இந்த கொடூரமான செயல்களை, சாதாரண மனிதனாக வேதமாக நடிக்கும் தேஜா சஜ்ஜா, மகாபீர் லாமாவை எதிர்த்து போராடி ஒரு வெற்றி ஹீரோ வாக பரிணமிக்கிறார்.
படத்தின் சிறப்பு
படக் காட்சிகள் மிகவும் கண் கவர் விஷுவலாக அமைந்துள்ளது மிகவும் சிறப்பானது. VFX தொழில்நுட்பம் மக்களை சுண்டி இழுககிறது என்றால் அது சரியாகவே பொருந்தும். சுமார் 60 கோடி ரூபாய் பட்ஜெட்டில் எடுக்கப்பட்டுள்ள படம் உண்மையாகவே ஒரு நல்ல படமாகவே எடுக்கப்பட்டுள்ளது. .
படத்தின் பலம்
நம்பிக்கை, தியாகம் பக்தி மற்றும் உணர்ச்சி இவைகளால் படம் பின்னப்பட்டு புராணங்களின் மதிப்புகளை நன்கு வெளி கொண்டு வந்திருக்கிறது என்றே சொல்லலாம். தாய் மகன் உறவு, வழிகாட்டிகள் மற்றும் சீடர்கள் ஆகியோரின் பங்களிப்பு பார்வையாளர்களை ஈர்க்கிறது.
பலம் - நடிப்பு
வேதாவாக நடிக்கும் தேஜா சஜ்ஜா பாராட்டபடவேண்டியது ஒன்று. ஆக்ஷன் மற்றும் உணர்சிகளை நன்றாகவே செய்துள்ளார். துணை நடிகர்கள் எல்லோருமே சிறப்பாக செய்துள்ளனர்.
இயக்குனர் கார்த்திக் புராதன ஆன்மீகத்தையும் நவீன காலத்து உருவாக்கங்களையும் சிறப்பாகவே கையாண்டு வெற்றி பெற்றுள்ளார். அந்தகாலத்திலும் பேராசை ஈகோ போன்ற மன நிலைகளையும் நன்றாகவே எடுத்து கையாளப்பட்டுள்ளன.
பலவீனம்
சற்று வீக்கான விஷயமாக இரண்டாம் பகுதி மெல்ல நகருவதாக உணரப் படுகிறது. குறைவான நகைச்சுவை காட்சிகள், சுருக்கமான சில காட்சிகள் படத்தின் தொய்வை ஏற்படுத்துவதாக மைந்துள்ளன.
சில குறைபாடுகளைத் தவ்ர்த்துவிட்டு, பார்க்கும்பொழுது, படத்திற்கு 50 விழுக்காடு கிடைக்க வாய்ப்புள்ளதாக கணிக்கபடுகிறது.
முடிவாக
பழமையையும் வீரத்தையும் ரசிப்பவர்களாக இருந்தால் இந்த படம் உங்களுக்கு நல்ல பொழுதுபோக்காக அமையும்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக